Wednesday, September 16, 2009

உறுத்தல்




எழுதியவனுக்கு
நன்றி கூறாமல்
வாசித்து முடித்தான்


பலத்த
கைத்தட்டல்களின்
முடிவில்


அவன் மனதை
உறுத்த ஆரம்பித்திருந்தது...
கவிதை


-செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி