Monday, March 2, 2009

நீ இல்லாத இன்றில்....

மழை நின்றதற்கான
அடையாளங்களை தூறிக் கொண்டிருந்த
தூறல் மத்தியில்
நமக்கான தூறல்களைச் சுமந்தபடியே
நகர்கையில்

வெள்ளையும் மஞ்சளுமான
பூவொன்றை பறித்து
நீ சற்றே சுழற்றிய போது
என் முகத்தில்
சில்லென்று விழுந்த
நீர்த்துளிகள்....

நீ இல்லாத இன்றில்
பூத்திருந்த அதே மலரின் சூட்டில்
ஆவியாக்கப்படுதலில்
அழுகிறேன்

-செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி