Tuesday, February 28, 2012

ஏன் அதட்டிக்கொண்டிருக்கிறாய்?

ஏன் அந்த நாயை
அதட்டிக்கொண்டிருக்கிறாய்?


கேட்கவேண்டியதை
கேட்டுவிடேன்
மௌனங்களையும் விழுங்குவதால்
எதை சாதித்தோம் நாம்?


மிருகங்கள்
கடித்துக்கொண்டும்
பிராண்டிக்கொண்டும்
குலாவிக்கொண்டும்
காட்டிவிடும்
உணர்ச்சிகளை ஏன்
நாம் மட்டும்
மறைத்துக்கொண்டும்
மழுப்பிக்கொண்டும்?


பிடிக்கும்.
பிடிக்காது.
சரி.
தவறு.
ஆம்.
இல்லை.
போன்ற நேரிடையான
வார்த்தைகளில்
மனிதனுக்கு
பிடிபடாத
கணித சூத்திரம் தான் என்ன?


மற்றொருவர்
மனதில் மங்கிப் போகும்
வார்த்தைகளை
நான் படிக்க
கற்றுக்கொள்ளும்
வரையேனும்...


உள்ளதை உள்ளபடி
கொட்டிவிடு
ஏன் அந்த நாயை
அதட்டிக்கொண்டிருக்கிறாய்?
- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

2 comments:

  1. பிடிக்கும்.
    பிடிக்காது.
    சரி.
    தவறு.
    ஆம்.
    இல்லை.
    போன்ற நேரிடையான
    வார்த்தைகளில்
    மனிதனுக்கு
    பிடிபடாத
    கணித சூத்திரம் தான் என்ன?-- arumaiana varigal

    nalla kavithai...

    ReplyDelete
  2. Hi ananymous, Ungal Karuththukaluku nandrigal pala. Do i know you?

    ReplyDelete

Reactions