Tuesday, May 10, 2011

பொறாமை பிடிக்கிறது எனக்கு


மனநலம் குன்றியவனை
பார்த்தால் மட்டும் உடனே
பொறாமை பிடிக்கிறது எனக்கு.

அவனுக்கென்று ஒரு உலகம்
யாரும் நுழையமுடிவதில்லை அதற்குள்

அவனே ராஜா அவனே மந்திரி
எவனுக்காகவும் இவன் இயல்பை இழப்பதாகவோ
எவளாலும் இவன் வருந்தி அழுவதாகவோ இல்லை

சாக்கடை
சகதி
நரம்
புழுதி
எச்சில்..
எதுவும் செய்யாது இவனை
அவனுக்கென்று ஒரு உலகம்
யாரும் நுழையமுடிவதில்லை அதற்குள்

வேசிகள் அலையும் வீதி
அள்ளி சிதறிக்கிடக்கும் பொய்
கொச்சை அரசியல்
குத்து கொலை

பாசம் பாசாங்கு
பகட்டுப் புன்னகைகள்
பொரணி
மனிதமில்லா சமுதாயம்
மானபங்கம்
நம்பிக்கை துரோகம்
எதுவும் சிதைக்கமுடியாத ..
அவனுக்கென்று ஒரு உலகம் உள்ளது
யாரும் நுழையமுடிவதில்லை அதற்குள.


மனநலம் குன்றியவனை
பார்த்தால் மட்டும் உடனே
பொறாமை பிடிக்கிறது எனக்கு.

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

No comments:

Post a Comment

Reactions