Sunday, May 1, 2011

அவளால் இழந்தவை.

இயல்பை விட்டு விலகியதாய்
இந்த நாட்கள்

அகண்ட வெளியில்
அள்ளித்தெளித்த துளிகளை
தேடுவதினும்
கடினாமாகிப் போனது
என் இயல்பை மீட்கப் போராடும்
இந்த நாட்கள்

கனவில்
தூக்கங்களை ரசிக்கும்
புதிய உத்தியில்
கைதேர்ந்தனவாய்
மாறியிருக்கின்றன
கண்கள்

ஆவல்கள் தானே உவந்து
அரிக்கத் தொடங்கியிருக்கின்றன
ஆவல்களை

எந்நேரமும் இயங்கும்
எடைமேடை இதயம்
பாரங்களின் மாறுதல்களை
பழகிக்கொண்ட வண்ணம்

அவள் என்ற புதிரில்
தொலைந்தும் தொலையாமல்
இயல்பை விட்டு விலகியதாய்
இந்த நாட்கள்.

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி ( cliffnabird@gmail.com)

2 comments:

Reactions