Monday, October 5, 2009

கடலை வண்டி




பங்காளிகள் பறித்துக்கொண்ட
பூர்விக சொத்து போனாலென்ன வந்தாலென்ன
பையனை வக்கீலாக்கனும்

பட்டணம் எல்லாம் பொழப்புக்குத் தான்
பொடி காசு சேத்தாயினும்
ஊர்ல ஒரு குழி நிலம் வாங்கனும்

இருபது ரூபா சீட்டு போட்டு
இந்த முறையேனும்
இளையவளுக்கு பொங்கலுக்கு புதுசு எடுக்கனும்

மழைக்கு ஓடி ஒதுங்க வழியில்ல
மாசம் பொறந்ததும் வண்டிக்கு
தார்பாய் மாட்டனும்

சொருவு கீத்து போட்டுனாலும்
பருவமழை
அடுப்படில பெய்யாம பார்த்துகனும்

உருண்டு கொண்டிருந்த
கடலை வண்டியின்
ரோதையினூடே
உருண்டு கொண்டிருந்தது
உருட்டியவனின் உள்ளமும்

பொழுது சாய்கையில்
விடியும் இவனுலகம்
விரைவில் விடிய
ஒரு பொட்டலம் வாங்கிச் சென்றேன்
கடலை பிடிக்காத போதிலும் ...

-செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி.

2 comments:

  1. நல்ல கவிதையில் திருஷ்டியாக ஆங்காங்கே பல பிழைகள். தவிர்த்திருக்கலாம்.

    \\பொழுது சாய்கையில்
    விடியும் இவனுலகம்
    விரைவில் விடிய
    ஒரு பொட்டலம் வாங்கிச் சென்றேன்
    கடலை பிடிக்காத போதிலும் ...\\

    நீங்கள் வாங்கிய அந்த ஒரு பொட்டலத்தில், விடிவு வந்து விடாதெனினும், காலத்தாற் செய்த சிறு உதவி. மனதை அசைக்கிறது - பிடிக்காத போதும் வாங்கிச் சென்றதில் வெளிப்படும் உங்கள் அன்பு.

    தொடருங்கள் இப்படியான கவிதைகளை, பிழைகளைத் தவிர்த்து.

    ReplyDelete
  2. ok.. now can u write a 8 liner abt the current IPL fiasco?? It has to start with shashi tharoor/sunanda puchkar till lalit modi exit!!!

    You can make it 12 liner maxxxx... And the time limit is till 2nd MAY..

    ping me after posting it!! (Am a demanding customer boss.. hehe)

    ReplyDelete

Reactions