Saturday, May 22, 2010

கடவுள்களும் காதல்களும்

கீற்று.காம் இல் பிரசுரிக்கப்பட்டது. கீற்றுவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

http://www.keetru.com/index.php?option=com_aisection&id=8264&Itemid=139

நொண்டி நொண்டி
நடக்கும்
நாயையும்

தன்னைத் தானே
கீறி
இரத்தம் பார்த்து
சிரிக்கும்
மனம் பிறழ்ந்தவனையும்

சாலை கடக்கத் துணை தேடும்
குருடனையும்

பசியில்
அழும்
குழந்தையையும்
கடந்து..

கடற்கரையில் போய்
காதல் காவியம் மட்டும்
எழுதி வரும்
ஒவ்வொரு பேனா முனையின்
வழியோடி தான்

கடலில்
தற்கொலை செய்து கொள்கின்றன
கடவுள்களும் காதல்களும் .

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

cliffnabird@gmail.com

No comments:

Post a Comment

Reactions