Thursday, May 27, 2010

எரிந்து கொண்டிருக்கிறேன்

கீற்று.காம் இல் பிரசுரிக்கப்பட்டது. கீற்றுவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

http://www.keetru.com/index.php?option=com_aisection&id=8264&Itemid=139


அருகில் வராதீர்கள்
எரியத் தொடங்கியிருக்கிறேன்

இளைப்பாற
எடுத்துக் கொண்ட

இடங்களை

உறங்கும்
பொழுதுகளை

தயக்கங்களின்
பயங்களின்

வேர்களை

நான் என்பதை.

மறுக்கும்
உலகங்களை

சளைக்கச் செய்யும்
சூழ்ச்சிகளை

முடியாதவைகளாய்
குறிப்பெழுதியவைகளை.

சாம்பலாகும் முன்
எரித்து விடுவேன்
...
அனைத்தையும்...

அருகில் வராதீர்கள்
எரிந்து கொண்டிருக்கிறேன்.

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

1 comment:

Reactions