Saturday, November 1, 2008

மலைமுகடும் சிறுபறவையும்


அதோ அந்த மலைமுகடு
அங்கே சென்றமர்ந்து
சிறகு கோதி
சிலாய்த்திட ஆசை எனக்கு

தூரம் கடப்பதன் அயர்வு
பாரம் சுமந்ததன் பலன்
வருத்தி வளர்ந்த உயரங்கள் எல்லாம்
சுகமாய் தோன்றும் அம்முகடுகளில்

உயரத்தில் இருந்து உலகை காணும்
உணர்வுகள் உதடுகளால் உரைக்கவியலா

சற்றே விலகினாலும்
கணங்கள் தலையிலேறி
விழுந்து சிதற நேரும்
விளிம்புகள் அவை

விலகா பறவைகள்
கால் தடம் பலமுகடுகளில்

ஆசை முகடுகள்
அதோ அதிகமதிகமாய்

முகடு பைத்தியம்
முத்திவிட்டதெனக்கு

இதயம் இயங்கும்வரை
இறக்கைகளில் இலக்கைக் கூட்டி
நகர்ந்து கொண்டிருப்பேன்
முகடுகளை நோக்கி

செ. செந்தில் கணேஷ்

1 comment:

Reactions