Monday, November 3, 2008

வலி


அசந்து மசந்து
அரை நொடி ஒயமுடியவில்லை அதற்கு
அப்போது தான் அழைப்பு வரும்
ஃபா ஃபா என்று

கட்டும் முன் கருத்தோ
அவிழ்க்கும் முன்
ஆலோசனையோ ஏதும் இல்லை


வெந்துபோன வேதனையில்
மேனியை சிலிர்த்து
கனவை உதிர்த்து
மெல்ல நடக்குமது
செல்லுமிடம் அறியாது

தடி பிடித்தவன்
அடிப்பான் ஐயோ அங்கே
குடித்தவனும் அமர்ந்து
கூட்டச்சொல்வான் வேகத்தை
கண நேரத்தில் கடக்க வேண்டும்
கண்டங்கள் இவர்களுக்கு
கடுக்கும் காலுக்கு தான் தெரியும்
கற்சாலையின் கடுமை

கயிற்றிடுக்கில் கழுத்தாய்
காலம் செல்லுமதற்கு
காமம் முதலாய்
கடைசி உணர்ச்சி வரை
கண்ணிரில் கரைத்தபடியே
கால்கள் நகரும் அதற்கு


உடல் மெலிந்தோ
தோல் சுருங்கியோ
கிழடு தட்டிய ஒரு நாளில்
கசாப்புக்கு விலை பேசுவதில் முடியும்
மனிதன் செய்யும் நன்றி நவிழ்தலகளும்
பிரிவுபசாரங்களும்..

செ. செந்தில் கணேஷ்

No comments:

Post a Comment

Reactions